Breaking News

நயன்தாராவா...? பெயரை கேட்டதும் ஷாக் ஆகிய ரகுல் ப்ரீத்

நயன்தாராவுக்கு மார்க்கெட் நிலவரம் பிரகாசமாக இருப்பதால் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. கால்ஷீட் பற்றாக்குறையால் பல படங்களை தவிர்த்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தமிழ், தெலுங்கு மொழி படத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. பாலிவுட் ஹீரோயின் பரிணிதி சோப்ராதான் முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு நடந்தது. 

பிறகு அதில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரி ஆவதை எண்ணி குஷியில் இருந்தார் ரகுல். இந்நிலையில் முருகதாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

சோலோ ஹீரோயினாக முருகதாஸ், மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக எண்ணி சந்தோஷத் திலிருந்த ரகுலுக்கு நயன்தாராவும் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி அளித்தது. இதனால் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குறையும் என்று எண்ணினார். உண்மையில் நயன்தாரா நடிக்கிறாரா என்று முருகதாஸிடம் கேட்டபோது, ‘என் படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை. இது வதந்தி’ என்றார். இயக்குனரின் பதிலை அறிந்த பிறகே ரகுல் ப்ரீத் நிம்மதியானராம்.