Breaking News

முக்கிய திருப்புமுனையினை எதிநோக்கப்போகும் தாஜூதீன் கொலை வழக்கு !!!

கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் தொடர்பில் ஏற்கனவே பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்,  

இதற்கமைவாக தாஜூதீன் கொலைசெய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி மாளிகையிலிருந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்திலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள், கொலைச்சம்பவத்தை மூடி மறைக்கும் வகையில் காணப்படுவதாக நேற்று (7) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின்போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கானது எதிர்வரும் 21ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அன்றைய தினம் தொலைபேசி அழைப்புக்கலை மேற்கொண்டவர்கள் தொடர்பான விபரம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.