மட்டக்களப்பு காத்தான்குடியில் கோரவிபத்து !!!
இன்று(8) அதிகாலை மட்டக்களப்பு, கத்தான்குடிப் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் விபத்துக்குள்ளான லொறியின் சாரதியும் நடத்துநரும் படுகாயமடைந்துள்ளனர். கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறியானது ஓடுகளை இறக்குவதற்காக மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதான வீதியோரத்தில் தரித்து நின்ற மற்றுமொரு லொறியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது .இதன்போது, அருகிலிருந்த மின் கம்பமும் சேதமடைந்துள்ளது.