Breaking News

இலங்கயின் முதலாவது இராணுவத் தளபதி தமிழரே !!!

பொலிஸ் சேவை, பாதுகாப்புப் படை  மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் என்பவற்றில் தமிழ் உத்தியோகத்தர்கள் அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமம் டக்ளஸ் தேவானந்தா  பிரதமரிடம் விடுத்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதி தமிழரே எனவும் பொலிஸிலும் தமிழ் உயர் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இருந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். மேலும் கடந்த வருடம், 216  தமிழ்  பொலிஸ் கான்ஸ்டபிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.