பாதுக்க பகுதியில் உள்ள வீடொன்றில், தாம் விசேட பொலிஸ் பிரிவினைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட 3 இராணுவ வீரர்கள் பாதுக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது தப்பியோடிய மேலும் மூவரினை தேடும் நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.