வயதான பெற்றோரை கைவிடுவோரின் சொத்துக்களை பறிகும்! புதிய சட்டம் !!
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, வயதான பெற்றோரை கவனிப்பாரின்றி விடுவோர்மீதும் முதியோர் மற்றும் முதியோர் இல்லங்களில் சேர்ப்போரின் சொத்துக்களினை பறிமுதல் செய்யக்கூடிய புதிய சட்டம் ஒன்று இயற்றல் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பெற்றோரை கைவிட்டுவிட்டும், முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு அவர்களின் மரணத்துக்கு பின்னர் சொத்துக்களைத் தம்பெயருக்கு மாற்றிக் கொள்ளும் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பில் தமது அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளதாகவும் எனவே இது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.