Breaking News

பஷில் – மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் !

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (10) ஆஜராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பசில் கடந்த ஆட்ச்சிக்காலத்தின் போது மலையக அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்புக்காக 300 மில்லியன் ரூபா அரச நிதி செலவுசெய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதகெனவும் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.