தாயின் கவனயீனத்தால் 45 நாட்களேயான பெண் சிசு மரணம் !!!
தாயின் கவனகுறைவால் சிவச்செல்வன் கேசவி எனும் 45 நாட்கலேயான என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. குறித்த சமபவமானது நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் கடந்த சனிக்கிழமை(08) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தாய் குழந்தைக்கு பாலூட்டியபின் குழந்தையினை ஏணையில் கிடத்திவிட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார் இவ்வேலையில் ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக சிசுவின் முகத்தின் மீது தவறுதலாக வீழ்ந்துள்ளது. வேலைகளை முடித்துவிட்டு வந்த தாய், குழந்தையை தூக்கிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளதால் சிசுவை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும் சிசு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.