பசிலிற்கு சொந்தமானது என்று கூறப்பட்ட மல்வானை காணியானது பகிரங்க ஏலத்தில் !!
பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுவந்த மல்வானை பகுதியிலுள்ள காணியையொன்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்து பெறப்படும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு பூகொட நீதிமன்ற நீதவான் ருவன் பத்திரன இன்று (14) உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த வழக்கு விசாரணையின்போது பசில் குறித்த மல்வானை காணி தன்னுடையதல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.