கஞ்சாவைத்திருந்த குற்றத்தின் பேரில் கண்டி நகர்ப்பகுதியின் பிரபல 3 பாடசாலையை சேர்ந்த 8 மாணவர்கள் கைது !
கண்டி, தெல்தெனிய பகுதியில் கஞ்சா போதைப்பொருளினை வைத்திருந்த கண்டி நகர்ப்பகுதியின் பிரபல 3 பாடசாலையை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுகிடைப்பட்ட எட்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் தெல்தெனியவின் ஒருதொட பகுதியில் சந்தேகமான முறையில் நடமாடுவதை அவதானித்த பொலிசாரே இவர்களை கைதுசெய்து தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் குறித்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 25,000 ரூபா பெறுமதியான சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.