Breaking News

விமானக் கழிவகையில் குழந்தையின் சடலம் !!

கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் கழிவறையில் இருந்து குழந்தையின் உடலம் மீட்கப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த விமானத்தை சுத்தம் செய்ய சென்ற பணியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

விமானத்தின் கழிப்பறையில் பிறந்து 5 முதல் 7 மாதங்களான குழந்தை ஒன்று பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் குழந்தையின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த போலீஸார், அவர் தான் உண்மையான குற்றவாளியா என்பது உறுதியாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.