Breaking News

ஏழு கட்சிகள் ஒருமித்து ஹர்த்தாலுக்கு அழைப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த    சம்பவத்தைக் கண்டித்து, வட மாகாணம் முழுவதுமாக நாளையதினம்(25), இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு ஒன்றிணைந்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் குறித்த கொலைச்சம்பவத்தை கண்டித்து, பல்கலைக்கழங்களிலும், பாடசாலைகளிலும்  இன்றைய தினம், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்றுமாலை 4 மாலை இக்கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான அமைப்பும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.