Breaking News

துருக்கியில் பாரிய குண்டுவெடிப்பு !!

துருக்கி நாட்டில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு அதரவாக இருப்பதாக அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 எம்.பி.க்கள்  டியார்பக்கிர் நகரில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் நாட்டின் தென்கிழக்கு பகுதியான பக்லர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்துக்கு அருகே இன்று பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.