Breaking News

இந்திய பாக்கிஸ்த்தான் எல்லையில் தொடரும் பதற்றம்..!

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் கடும் சண்டை நடந்து வருவதால் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் தங்களது உடைமைகளை விட்டு விட்டு பதறியடித்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். 

பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை மீறி கண் மூடித்தனமாக தாக்குதல் நடாத்துவதாகவும் இதில் இந்திய தரப்பில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.