Breaking News

இலஞ்சம் வாங்குவோர் மற்றும் கொடுப்பவர்களுக்கு எதிரா சட்ட நடவடிக்கை !!!

இலஞ்சம் வாங்குவோர் மற்றும் கொடுப்பவர்களுக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி   பணிப்புரை விடுத்துள்ளார்

இலஞ்சம் வாங்குவோர் மற்றும் கொடுப்பவர்களுக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  மட்டக்களப்பு சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா பணிப்புரை விடுத்துள்ளார் .

மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது சட்ட விரோத செயல்பாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இதனுடன் தொடர்புடையவர்கள் இலஞ்சம் கொடுப்பது   மற்றும்  இலஞ்சம் வாங்குவது  தொடர்பாக  மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதிக்கு கிடைக்கப்பட்ட தகவல் அமைய இது தொடர்பாக மட்டக்களப்பு சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது

இதன் போது குறித்த செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்  இவ்வாறு இலஞ்சம் வாங்கும் சமூக விரோத செயற்பாட்டை செய்பவர்களை  ஊக்குவிப்பவர்கள் எவராக இருந்தாலும் பாராபட்சமின்றி உரிய ஆதாரங்களுடன் இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்வதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு  சமுதாய சார் சீர்திருத்த திணைக்கள  உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா  பணிப்புரை விடுத்துள்ளார்

(லியோன்)