Breaking News

அலுவலக நேரத்தை 3 மாதங்களுக்கு பரீட்சார்த்தமாக மாற்றுவது தொடர்பில் கவனம் !

தற்போது நிலவுகின்ற அதித வாகன நெரிசலுக்கு தீர்வினைக்காணும் நோக்கோடு அலுவலக நேரத்தினை மாற்றுவது தொடர்பாக அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதன் முதற்கட்டம்  பத்தரமுல்ல பகுதியில் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் 3 மாதங்களுக்கு பரீட்சார்த்தமாக நடைமுறைபடுத்த முன்னெடுக்கப் படவுள்ளதாக த் தீர்மானித்துள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டமானது வெற்றியளிக்கும் பட்டசத்தில் கொழும்பு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.