Breaking News

இனவாத செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் அமைதிப்பேரணி !

அண்மையில் மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி சுமணரத்ன தேரர் சிறுபான்மை இன மக்களை இனவாதிகள் என தூசித்து முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதைக் கண்டித்தும் பௌத்த மக்கள் வாழாத தமிழ்ப் பிரதேசங்களில் விஹாரைகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தி, மட்டக்களப்பு  செங்கலடி யில் இன்று  அமைதி பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது .

பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் ‘தேரரே  அடாவடித்தனத்தை உடனடியாக நிறுத்து’ இனவாதத்தைத் தூண்டாதே,, ‘அரசே பௌத்த மக்கள் வாழாத இடங்களில் விஹாரைகள் அமைப்பதை நிறுத்து’, ‘பௌத்த மதத்திற்கும் இந்து சமயத்திற்கும் சம அந்தஸ்தை வழங்கு’, ‘அரசே திட்டமிட்ட அத்துமீறிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்து’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பொதுமக்களும் இணைந்து பேரணியை முன்னெடுத்திருந்தனர்.