மழை தொடருமானால் மண்சரிவு அபாயம் !!!
நாடெங்கிலும் பரவலாக பெய்துவரும் மழை வீழ்ச்சி காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது இதனடிப்படையில் இன்று நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொலை கொன்கிடிய பகுதிகளில் மண்சரிவு அபாயம் காரணமாக 18 பேர் குடிபெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.