Breaking News

நரியால் தங்கம் வென்ற புகைப்படம் !!

இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் பய்ஜூ பாடீல் உலகக் கோப்பை புகைப்பட போட்டியில் பங்கேற்று கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

வன உயிர்களை புகைப்படம் எடுப்பதை மட்டுமே தனது வேலையாக கொண்டிருக்கும் இவர் செர்பியாவில் நடைபெற்ற Federation International d’Education Physique (FIEP) என்ற புகைப்பட கலைஞர்களுக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றதுடன் தங்கக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து, இவர் பேசிய போது, நான் எடுத்த நரியின் படம் தான் எனக்கு பரிசை பெற்றுத் தந்தது. இந்த படத்தை எடுப்பதற்கு மத்திய பிரதேசத்தில் உள்ள பீட் என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கி காத்திருந்து சரியான கிளிக் செய்யதேன்.

நரியை சரியான முறையில் படம் பிடிப்பது மிகவும் கடினம், அது மிகவும் கூச்ச சுபாவம் உடையது என்பதால் அதை படமெடுப்பதற்காக அது ஊளையிடும் பகுதிகளுக்கு இரவு, பகல் பாராமல் கூட ஓடினேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு பலனாக தான் தங்க கோப்பை கிடைத்துவிட்டது என பய்ஜூ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், இந்த போட்டியில், இத்தாலி நாட்டை சேர்ந்த போனர் மவ்ரிஜியோ என்ற புகைப்பட கலைஞர் வெள்ளி பதக்கமும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குளோபர் ஜான் வெண்கல பதக்கங்கள் வென்றனர்.