Breaking News

இனவாதம், மதவாதத்தை தூண்டுவோருக்கு சேவை செய்யவென விசேட பொலிஸ் பிரிவு !!!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான இடையிலான நல்லிணக்கத்தைக் குழப்பும் நோக்கோடு கருத்துக்களை வெளியிடுபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கென விசேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டில் மீண்டும் இன வன்முறையொன்றை ஏற்படுத்தும் நோக்கோடு சதித்திட்டமொன்று  நடைமுறை படுத்தபட்டுள்ளதாக  புலனாய்வு பிரிவினரால் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கமைவாக சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தூண்டும் நோக்கில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடும்படி ஜனாதிபதியால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிற்கு இணங்கவே இவ் விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.