Breaking News

சிங்களமொழி புறக்கணிப்பு; ஒன்றிணையும் 33 சிங்கள பௌத்த அமைப்புக்கள் !!!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான படிவமானது தமிழ் மொழியில் மாத்திரம் காணப்படுவதானால்,   குறித்த சிங்கள மக்கள்  சிரமங்களை எதிர்நோக்குவதாக " நாட்டுக்காக நாம் எனும் தேசிய அமைப்பின் ஒன்றியம்" நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.

இதன் போது கருத்து அங்கு கருத்து வெளியிட்ட ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள குறித்த படிவத்தில் சிங்களமொழியில் ஒரு சொல்லேனும் காணப்படவில்லை எனவும் அதேபோல் இலங்கை விமானசேவையில் வழங்கப்படும்  உணவு மெனு அட்டை அனைத்திலும் ஹலால் உணவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட தேரர் புதிய அரசியலமைப்பைத் தோற்கடிப்பதற்காக, 33 சிங்கள பௌத்த அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.