Breaking News

கிரிக்கெட்டில் எனக்கு பிடித்ததே இதுதான் ; தனஞ்சய டிசில்வா

இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. ஜிம்பாப்வேயின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை அணி 112 ரன்களுக்குள் 4விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த தனஞ்சய டிசில்வா, உபுல் தரங்கா அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

உபுல் தரங்கா 79 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து அபாரமாக விளையாடிய தனஞ்சய டிசில்வா சதம் அடித்து அசத்தினார். 127 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 2வது டெஸ்ட் சதமாகும். சதம் அடித்தது குறித்து டிசில்வா கூறும்போது,

என்னுடைய அணி தடுமாறி கொண்டு இருக்கும் போது நான் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று தீர்மானித்தேன். என்னுடைய பணியே நெருக்கடியான சூழ்நிலையில் விளையாட வேண்டும் என்பதே. அதுதான் எனக்கும் பிடித்து இருக்கிறது என்றார்.