குளவி கோட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணம் !
கலஹா - வெலனன் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தோட்டத்தை சேர்ந்த இருவர் தொழிலூக்காக தோட்டம் ஒன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.