7 கோடி கப்பம் கேட்டு மாணவனனை கடத்திய நண்பர்கள் !!!
தங்கொட்டுவ, கோனவில பகுதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கடத்தப்பட்ட மாணவனின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் 7 கோடி ரூபா கப்பம் கோரிய குறித்த கடத்தல் காரர்கள் இருவரும் 19 வயதை உடைய அவரின் நண்பர்கள் எனவும் குறித்த கடத்தல் சம்பவமானது பரீட்சையைக் கைவிடவும் பெற்றோரிடம் பணம் பறிக்கவும் மூவரும் இணைந்து செய்த நாடகமெனத் தாம் சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்