Breaking News

அஜித்குமாரிடம் ரசிகர்கள் கெஞ்சுவதற்கு என்ன காரணம்?

தல-57 படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு 60% மேல் முடிந்துவிட்டதாம்.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்து ஒரு ரேசர் கூறியதை நாமே நம் தளத்தில் கூறியிருந்தோம்.

இதில் அவர் குறிப்பிட்டத்தை பார்க்கும் போது, படத்தில் மிகவும் கஷ்டமான ஒரு ஸ்டண்டிற்கு இவர் டூப் என தெரிகின்றது, அஜித் பெரும்பாலும் டூப்பை விரும்பாதவர், அப்படியிருக்க, இவை அதிபயங்கர சண்டைக்காட்சி என்பதால் இந்த முடிவாம்.

மேலும், இதில் பல கஷ்டமான சண்டைக்காட்சிகளை அஜித் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். இதனையறிந்த அஜித்குமார் ரசிகர்கள் “நீங்க ஸ்க்ரீன்ல வந்தா மட்டும் போதும், இவ்ளோ ரிஸ்க் எல்லாம் எடுக்காதிங்க தல” என்று சமூக வலைதளங்கள் வாயிலாக  வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். முன்னதாக, வேதாளம் படப்பிடிப்பில் காலில் காயம் அடைந்து அறுவைசிகிச்சை செய்து ஆறு மாதம் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், அஜித்குமார் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து நடிப்பது ரசிகர்களுக்கு ஒரு சங்கடாமான நிகழ்வாக இருக்கும் என்பதே உண்மை.