மனிதாபிமானம் , மனிதத்துவம் இன்று இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது
(லியோன்)
இன்று பணம் இருந்தால் உலகத்திலே எதையும் வாங்கலாம் ,ஆனால் மனிதாபிமானம் , மனிதத்துவம் என்ற ஒரு விடயத்தை
பணத்தால் வாங்க முடியாது .அந்த ஒரு விடயம் தான் இன்று இந்த உலகத்திலே தொலைந்து
போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது என மாவட்ட அரசாங்க
அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் தெரிவித்தார்
.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 2016ஆம்
ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வு 20 .12.2016 செவ்வாய்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார் .
ஒளிவிழா என்பது உண்மையாக கிறிஸ்மஸ் காலங்களில்
அனைவராலும் கூறப்படுகின்ற அந்த வார்த்தையின் அர்த்தம் பலவகையாக வருடம் தோறும்
,மாதம் தோறும் ,நாள்தோறும் சொல்லப்பட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையே இருக்கின்ற
உளரீதியான பிரச்சினைகளும் ,சமூக ரீதியான பிரச்சினைகளும் இதுவரை தொடர்ந்து கொண்டேதான்
இருக்கின்றது .
அகதிகள் நாடு நாடாக தங்களுடைய
இடங்களை விட்டு செல்வதும்
,சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளும் ,பகைமைகளும் ஒருவரை ஒருவர்
ஏற்றுக்கொள்ளாத தன்மைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன .
இந்த நிலையிலே தான் ஒவ்வொரு
வருடமும் நாங்கள் இயேசுவுடைய பிறப்பை மிக சிறப்பாக , விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்
.
ஆனால் இது ஒரு சம்பிரதாய பூர்வமான நிகழ்வாக இந்த சமூகத்திலே மாறிக்கொண்டு
இருப்பதுதான் உண்மையாக வேதனைக்குரிய விடயம் .
அதாவது இயேசு எதற்காக பிறந்தார் ,எதற்காக இந்த உலகத்திலே வாழ்ந்தார் ,
அவர் ஏற்படுத்த விரும்பிய மாற்றம் என்ன ,அந்த மாற்றத்தின் ஊடாக தான் இந்த சமூகம் ,
மனித இனம் வாழவேண்டும் என்பதற்காக தன்வாழ்வை அர்பணித்து கொண்டார் .
அதனுடைய அர்த்தங்கள் எல்லாம் இன்று மறந்து போகின்ற விடயமாக ,மறைந்து போகின்ற விடயமாக
பார்க்கின்றோம் .
இன்று பணம் இருந்தால் உலகத்திலே எதையும் வாங்கலாம் ,ஆனால் அதே நேரத்திலே
மனிதாபிமானம் , மனிதத்துவம் என்ற ஒரு விடயத்தை பணத்தால் வாங்க முடியாது .
அந்த ஒரு விடயம் தான் இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு
விடயமாக காணப்படுகின்றது .
அந்த மனிதாபிமானம் , மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற ஒரு விடயத்தை
என்று நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ , ஏற்றுக் கொள்கின்றோமோ அன்றுதான் இந்த
கிறிஸ்துவின் பிறப்பும் , கிறிஸ்துவின் இறப்பும் ,உயிர்ப்பும் அர்த்த முள்ளதாக
இருக்கும் என தெரிவித்துக்கொண்டார் .