பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாகாணக் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கிழக்குமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாகாணக் காரியாலயம் 19.12.2016 திங்கள்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் கிழக்குமாகாணத்திற்கான
பிரதேச அபிவிருத்தி வங்கியின்
மாகாணக் காரியாலயம் வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.
வங்கி திறப்பு விழா நிகழ்வில் வங்கி
பொது முகாமையாளர் டி .எ . ஆரியபால, பிராந்திய பொது முகாமையாளர் ஜெக்சன் விஜேசேகர, மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் சர்வமத தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள்,
வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
(லியோன்)