Breaking News

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு விசேட திருப்பலி

(லியோன்)

குருத்துவ  திருநிலைப்படுத்தல்  விசேட திருப்பலி திருச்சடங்கு 17.12.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு  மறை மாவட்டத்தின்   அக்கரைப்பற்று  தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்  அன்ரனி டிலிமா,, பெரியகல்லாறு தூய அருளானந்தர் ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்   இருதயநாதன் ஜெமில்டன் , சகாயபுரம்  தூய சதா சகாய அன்னை ஆலய பங்கை சேர்ந்த அருட்சகோதரர்  ஜோசெப் நிகஸ்டன் ஆகிய மூன்று அருட்சகோதரர்களை   அருட்தந்தையர்களாக குருத்துவ  திருநிலைப்படுத்தும்  விசேட திருப்பலி திருச்சடங்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்   மட்டக்களப்பு  மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது

 இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,   அருட்தந்தையர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட   அருட்சகோதரர்களின் பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் .