Breaking News

யாழ்ளில் பஸ், வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி !!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் 10 சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. 


குறித்த விபத்தின் பொது மாதம்பேயிலிருந்து சுற்றுலா பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனிவுக்கு வந்துகொண்டிருந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 4 பெண்களும் 6 ஆண்களும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், யாழ் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


இந்நிலையில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில்  பயணித்த  17 பேர் காயமடைந்துள்ளதாகவும். விபத்துக்கான விசாரணைகளை போலீசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.