Breaking News

வாழைச்செனை, கல்குடா குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண 540 மில்லியன் ஒதுக்கீடு !!

கல்குடா பிரதேசத்தின் குழாய்க் குடிநீர் திட்டத்துக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையிலான பாரிய நிதியொதுக்கீடு கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் அவர்களின் முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பேரில் கல்குடா பிராந்தியத்துக்கான குடிநீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்காக 370 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாழைச்சேனை விஷேட நீர் விநியோகத் திட்டத்திற்கு மேலும் 170 மில்லியன் ரூபா நிதி அதே அமைச்சினூடாக முதலமைச்சரின் முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதனூடாக கல்குடா பிரதேசமானது மிக நீண்டகாலமாக அனுபவித்துவந்த குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.