ஜனாதிபதிக்கும் - பிரதமருக்கும் நீதிமண்ற அழைப்பாணை !!
20.03.2017 அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகிய இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நேற்றயதினம் அழைப்பாணை விடுதிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டின் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவினதும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலியான கையெழுத்துகளுடன் தயாரிக்கப்பட்ட ஆவணத்தைத் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகிய இருவரையும் முறைப்பாட்டாளர் சார்பில்லேயே இவ் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



