Breaking News

திருமலை சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை !!!

திருட்டுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் சிறையில் தடுத்துவைக்கப்பட்ட தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரன், வயது30, எனும் நபர் நேற்று(12) இரவு, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இவரது சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சடலம், சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.