Breaking News

லண்டனில் நெத்தியில் துப்பாக்கியினை எதிகொண்ட சவுரவ் கங்குலி!!

முன்னாள் இந்திய அணியின் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். 

இவர் கடந்த 1996ல் இங்கிலாந்து சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி தெரிவிக்கையில் லண்டனின் அண்டர்கிரவுண்டில், நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கேரேஜில் ஒரு குரூப் இருந்தது. அதில் இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் இருந்தனர்.

அவர்கள் குடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் எங்களை முறைத்துக்கொண்டே இருந்தான். நான் எந்தப்பிரச்சனை வேண்டாம் என உடன் இருந்த சித்துவிடம் சொன்னேன் பின் அவன் எங்களை நோக்கி வந்து என்னைப்பார்த்து என்ன சொன்னாய்? என்றான்.  சித்து அவனை தடுக்க, பிரச்சனை துவங்கியது. உடனே நான் என்னுடைய கண்ணாடி கழட்டி தரையில் வீசிவிட்டு எது நடந்தாலும் சந்திக்க தயாரானேன்.

பின் ஒரு ஸ்டேஷன் வந்தது அப்போது நான் அவனை தள்ளிவிட்டேன். அவன் கீழே விழுந்தான். அவன் எழுந்தபோது, என் முகத்தில் துப்பாக்கி இருப்பதைத்தான் பார்த்தேன். அப்போது என் மனதில் என் வாழ்நாள் இங்கேயே முடிந்துவிடும் என நினைத்தேன். அப்போது ஒரு பெண் அவனை பின்பக்கம் இருந்து தாக்கி, எங்களை காப்பாற்றினார். என தெரிவித்துள்ளார்.