Breaking News

கசப்பில்லாமலும் பாகற்காய் சாம்பார் செய்யலாம் ???!

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் மிகவும் நல்லது. இங்கு பாகற்காய் சாம்பாரை எப்படி கசப்பின்றி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 200 கிராம்
துவரம்பருப்பு - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
வெங்காயம் - 1 
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 5 மேசைக்கரண்டி
தனியா - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை :

* புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். 

* பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும். 

* தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 

* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.

* கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

* அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும். 

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

* இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..

* சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.

* தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.