Breaking News

புதுவருட விசேட திருப்பலி மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது.

(லியோன்)

புதிய ஆண்டு பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில்  விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.




மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் விசேட  பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு மாவட்ட உள்ள அனைத்து தேவாலயங்களிலும்  நடைபெற்றது.

புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் விசேட திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் மட்டக்களப்பு மரியாள் பேராலய பங்கு தந்தை எ .தேவதாசன் , உதவி பங்குதந்தை ஆகியோர் இணைந்து புதுவருட விசேட திருப்பலியை   இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒப்புகொடுத்தனர் .

இந்த திருப்பலியின் போது நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை வேண்டியும்  நாட்டு மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.


இந்த வழிபாட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் , சிறைச்சாலை தண்டனை கைதிகள் கலந்துகொண்டனர்.