மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி.தவராஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக
முன்னால் பிரதேச செயலாளர் வி.தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாநகர
சபை முன்னாள் ஆணையாளர் எம்.உதயகுமார் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்று
சென்றுள்ளதை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக முன்னாள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணையாளரை
வரவேற்கும் நிகழ்வு (23) திங்கள்கிழமை நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மாநகர வளாகத்தில் உள்ள
ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது இதனை தொடர்ந்து புதிய ஆணையாளர் அவரது
அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாநகர
சபை மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு
இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை
வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, மாநகர சபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், மாநகர சபை அலுவலக அனைத்து உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு
புதிய ஆணையாளராக நியமனம் பெற்றுள்ள வி.தவராஜா 1990 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம்
ஆண்டு வரை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் ஆசிரியராகவும், 1994 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும் 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மண்முனை பற்று ஆரையம்பதி
பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் மற்றும் கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 2001 ஆம்
ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரை பிரதேச செயலாளராக கடமையாற்றி
2017ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 23ஆம் திகதி திங்கள்கிழமை நண்பகல் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவியேற்று தமது மாநகர சபை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக முன்னாள் கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில்
பணிப்பாளர் கே.குணநாதன் தமது கடமைகளை (23) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
(லியோன்)