Breaking News

புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா

மட்டக்களப்பு  புனித  மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா மிக சிறப்பாக  நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா (27) இன்று அதிபர்  வெஸ்லியோ வாஸ்  தலைமையில்  நடைபெற்றது .

இந்த கால்கோள் விழா நிகழ்வில்   பிரதம விருந்தினராக  மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ சுகுமாரன்  கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் இதனை தொடர்ந்து  கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் தொடர்ந்து கல்லூரியின் இரண்டாம் தரம் மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றக்கப்பட்டனர்

இந்நிகழ்வில்  அருட்தந்தையர்கள் , கல்லூரி  அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் , கல்லூரி  ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர் .(லியோன்)