Breaking News

பூங்காவிற்கு அருகில் இவ்வீதியை கடப்பதற்கு மஞ்சள் கடவையினை அமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் மஞ்சள் கடவை இல்லாத காரணத்தால் பாதசாரிகள் வீதியை கடப்பதற்கு  அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கல்லடி பாலத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள  மீன் இசை சிறுவர் பூங்காவிற்கு  அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மாலை நேரங்களில் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது  

இவ்வாறு மட்டக்களப்பு நகர் பகுதியில் இருந்து வருகை  தருபவர்கள் குறித்த  பூங்காவிற்கு செல்வதற்கு  மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியினை  கடக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள் குறித்த  பிரதான வீதி ஊடாக  அதிகளவான வாகனங்கள் செல்லும் பகுதியாக தெரிவிக்கின்றனர் .

இந்த நிலையில் இப்பகுதியில் வீதியை கடந்து செல்வதற்கு மஞ்சள் கடவை இல்லாத காரணத்தினால் பெரும்  சிரம்மங்களை  எதிர் நோக்குவதாகவும்  பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

எனவே உரிய அதிகாரிகள் இதனை கவணத்தில் கொண்டு  குறித்த பூங்காவிற்கு அருகில் இவ்வீதியை கடப்பதற்கு மஞ்சள் கடவையினை அமைத்து தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் (லியோன்)