நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா
(லியோன்)
நம்பிக்கையின்
வாசல் பாலர் பாடசாலை திறப்பு விழா நிகழ்வு 02.01.2016 திங்கள்கிழமை
மட்டக்களப்பு நாவக்கேணி நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவக்கேணி , திராய்மடு பகுதியில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலை மட்டக்களப்பு பாராளுமன்ற
உறுப்பினர் மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களினால் திறந்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர் .வியாலேந்திரன் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரன்
, இரா . துறைரெட்ணம் , கிழக்குமாகாண கல்வி அமைச்சு இணைப்பு செயலாளர் எ. இ . போல் ,
ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி டேவிட் , ஓய்வுநிலை கிராம சேவை உத்தியோகத்தர் எ .
நேசதுரை , சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் மன்றும் பாடசாலை சிறார்கள்
,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .