Breaking News

மட்டக்களப்பில் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

குருத்துவ திருநிலைப்படுத்தப்பட அருட்தந்தையர்களை கௌரவிக்கும் நிகழ்வு 06.01.2017 மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்  17.12.2016 ஆம் திகதி அன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால் திருநிலைப்படுத்தப்பட அருட்தந்தையர்களான அன்ரனி டிலிமாஇருதயநாதன் ஜெமில்டன்ஜோசெப் நிகஸ்டன் ஆகிய மூவரும் அருட்சகோதரர்களாக பணியாற்றிய காலத்தில்  எகெட் கரித்தாஸ் நிறுவனத்திற்கு ஆற்றிய பணியினை கௌரவிக்கும் முகமாக மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில் எகெட் கரித்தாஸ் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட கௌரவிப்பு நிகழ்வு 06.01.2017 வெள்ளிக்கிழமை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அருட்தந்தையர்களின் தலைமையிலான விசேட திருப்பலி மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தில் ஒப்புகொடுக்கப்பட்டது.

இந்த விசேட கௌரவிப்பு நிகழ்விலும் நடைபெற்ற திருப்பலியிலும் மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(லியோன்)