Breaking News

செத்தாடா போய்ட்டான் உங்க ஹீரோ? அதிர்ச்சியூட்டும் FB பதிவு !!!

“செத்தாடா போயிட்டான் உங்க நடிகன்..

போடுற மாலை..ஊத்துற பாலை..பசியோட போராட்டம் பண்ற மாணவர்களுக்கு கொடுங்கடா நொன்னைகளா…! எந்த நடிகனும் உங்களை காப்பாத்த மாட்டான் “

இப்படி ஒரு முக நூல பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவுகிறது. யோசித்துப் பார்த்தால் படங்களில் வீர வசனம் பேசுகிறார்கள்.

நூறு பேரை அடித்து உதைப்பதும், அநீதிக்கு எதிராக பொங்குவதும், அரசியல்வாதி வில்லனை புரட்டி புரட்டி எடுக்கிறார்கள்.

தங்களை கடவுளாகக் காட்டிக் கொள்ளும் ஹீரோக்கள் இன்று மாணவர்கள் போராடும் போது வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்து விட்டு பதுங்கிக் கொள்கிறார்கள்.

இளைஞர்கள் இப்போது தான் விழித்துள்ளார்கள். இனியாவது கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், மாலை போட்டு வழிபடுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்.

எந்த நடிகனும் உங்களையோ, உங்கள் குடும்பத்தையோ, உங்கள் இனத்தையோ காப்பாற்ற மாட்டான்.