ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம்....!!
ரயில் திணைக்கள பொது முகாமையாளருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்திற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்நடவடிக்கையானது முன்னெடுக்கப்படுமாயில் இன்றயதினம் தினம் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், ரயில் சாரதிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடபோவதாக தமக்கு அறிவிக்கவில்லையென பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.