Breaking News

உருளைக்கிழங்கால் குடும்பமே இறந்த சோகம்!

அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மனிதனுக்கு ஆரோக்கிய சத்துக்களை வழங்குவது போன்று சில கொடுதல்களையும் விளைவிக்கின்றது. உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு எனும் விஷம் நிறைந்திருக்கும்.

அப்போது, அதனை உட்கொண்டால் உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா நிலைக்கு சென்றுவிடும் அல்லது மரணத்திற்கே வழிவகுக்கும்.

மேலும், அதிலிருந்து விஷம் கூட வெளியேறும் ஆபத்து உள்ளது.

அப்படி, ஒரு சம்பவம் தான் நடந்துள்து. Mikhail Chelyshev (42) அவர் மனைவி Anastasia (38) இவர்களுக்கு ஒரு மகனும், Maria என்ற மகளும் உள்ளனர்.

Anastasiaவின் தாய் Iraidaம் (68) இவர்களுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் ஒரு பாதாள அறை உள்ளது. அங்கு நிறைய பொருட்களை இவர்கள் குடும்பத்தினர் வைத்துள்ளார்கள்.
அதே போல காய்கறிகளை Maria அங்கு வைத்துள்ளார். அதிலும் அதிகளவில் உருளைக்கிழங்கை அவர் அங்கு வைத்திருந்தார்.

ஏற்கனவே வாங்கிய உருளைக்கிழங்கை அவர்கள் உபயோகப்படுத்தாத நிலையில் மேலும் உருளைக்கிழங்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

நாட்கள் போய் கொண்டிருக்க அந்த உருளைக்கிழங்குகள் அழுக ஆரம்பித்து நச்சுக்களாக மாறி அதில் விஷவாயு உருவாகியது . இதனிடையில் Mikhail வீட்டு தேவைக்காக உருளைக்கிழங்கை எடுக்க திடீரென அந்த அறைக்குள் சென்றார்.

அப்போது குவிந்திருந்த உருளைக்கிழங்குகள் விஷவாயுக்களாக மாறியிருந்ததால் அதிலிருந்து வந்த வாயு வாடை Mikhailஐ தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.

பின்னர் அவரின் மனைவி அவர் வெகு நேரமாகி வராததால் அங்கு சென்றுள்ளார். அவரும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். பின்னர் அவர் மகன் மற்றும் அவர் மாமியாரும் உள்ளே சென்றதில் மயங்கி விழுந்துள்ளனர்.

மாமியார் அந்த அறை கதவை முழுவதுமாக திறந்ததால் அந்த விஷ வாயு வெளியில் அதிகளவில் சென்றுள்ளது. பின்னர் Maria அங்கு சென்று பார்த்த போது தன் குடும்பமே விஷவாயு தாக்கி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பொலிசார் அங்கு வந்து சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த பெண் செய்த சிறு தவறால் தன் குடும்பத்தையே அவர் தற்போது இழந்துள்ளார்.