Breaking News

மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான முகாம்.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான முகாம் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி  கழகம் மாதாந்தம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் “உயிர்காக்க இரத்ததானம் செய்க” எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர், தாதியர்கள் மற்றும் ரோட்டரி கழக அங்கத்தவர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
(லியோன்)