Breaking News

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

(22) புதன்கிழமை  நேற்று இரவு களுதாவளையில் வைத்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் விமல்ராஜ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக்கண்டித்து மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

குற்றவாளிகளை உடனே கைதுசெய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஊடகங்கள் கருத்து கோரியபோது எவரும் கருத்து தெரிவிக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது. அச்சம் காரணமாகவே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முன்வரவில்லையென இங்கு தெரிவிக்கப்பட்டது.
(லியோன்)