Breaking News

ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டியை ரசித்த ரசிகைகள் வெளியேற்றம் !

முஸ்லிம் நாடான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டில் இருந்து மைதானத்துக்கு சென்று விளையாட்டுப் போட்டியை காண பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் அஷாடி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது.

அதைத் தொடர்ந்து 8 இளம் பெண்கள் ஆண்கள் உடை அணிந்து மாறு வேடத்தில் சென்றனர். விளையாட்டு மைதான வாசலில் சென்ற போது அவர்களை பாதுகாவலர் அடையாளம் கண்டு கொண்டார். அதை தொடர்ந்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.