Breaking News

தந்தை செல்வாவின் பிறந்த தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு

 (லியோன்)

தந்தை செல்வாவின் பிறந்த தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு (31) வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 119வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாம்  மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை  தமிழரசு கட்சியிக் கிளையின்  ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில்  தந்தை செல்வாவின் 119வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்  இரத்ததான நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுசெயலாளர் கே .துரைராஜசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையில் நடைபெற்றது. 

இந்த இரத்ததான முகாமின் ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றது.


இந்த இரத்ததான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஸ்ரீநேசன் ,எஸ் .யோகேஸ்வரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா .அரியநேந்திரன் , பொன் செல்வராஜா , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி பிரிவு வைத்தியர் , தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ,ஆதவாளர்கள் என பலர் கலந்து கொண்டு தமது உதிரத்தை  தானம் செய்தனர்