Breaking News

100 கிலோ தங்க நாணயம் கொள்ளை !!!

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ நிறை உடைய தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள அருங்காட்சியகத்திலேயே இவ் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இத்தங்க நாணயம் நேற்று முன்தினம் இரவு கொள்ளை போனது, அதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நாணயம் கனடா அரசால் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட  ‘பெரிய பனை ஓலை’ என பெயரிடப்பட்ட கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது .