Breaking News

மட்டக்களப்பில் பொலிஸார் வசமுள்ள காணிகள் இவருடத்தினுள் விடுவிக்கப்படும்’

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் மயிலம்பாவெளி பகுதிகளில் பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கமுடியும் என நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது  மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.