Breaking News

எதிர்காலத்தில் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்கப்போவதில்லை முஸ்லிம் பட்டதாரிகள் உறுதிமொழி

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ச்சியாக   நடைபெற்றுவருகின்றது.


கடந்த 40 தினங்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

மத்திய மாகாண அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் இன்னும் எங்களை ஏமாற்றாமல் நியாயமான தமது கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் எதிர்காலத்தில் எந்த தேர்தல்களிலும் தாங்களும் தங்கள் குடும்பங்களும் வாக்களிக்கப்போவதில்லையென்ற உறுதிமொழியை முஸ்லிம் பட்டதாரிகள் உறுதிமொழியை இன்று எடுத்துக்கொண்டனர்

கடந்தவாரம் இடம்பெற்ற உறுதிமொழி நிகழ்வில் முஸ்லிம் பட்டதாரிகள் கலந்துகொள்ளவில்லையெனவும் அந்த உறுதிமொழி தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே எடுக்கப்பட்டதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லையென்ற வகையில் சில விசமிகள் பிரசாரங்களை மேற்கொண்டுவந்த நிலையில் இந்த உறுதி மொழியை முஸ்லிம் பட்டதாரிகள் மீண்டும் எடுத்துக்கொண்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது  பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.  (லியோன்)